Athanda Ethanda Lyrics & Tabs by S. P. Balasubrahmanyam
Athanda Ethanda
guitar chords lyrics
திரைப்படம்: அருணாச்சலம் 1997
இசையமைப்பு: தேவா
பாடலாசிரியர்: வைரமுத்து
பாடகர்கள்: எஸ்.பி.பாலசுப்பிரமணியம்
சுலோகம்
ஓம் அருணாச்சலேஸ்வராய நமஹா
ஓம் அருணாச்சலேஸ்வராய நமஹா
பல்லவி
அதாண்டா இதாண்டா அருணாசலம் நாந்தாண்டா (இசை) -ஹா அதாண்டா இதாண்டா அருணாசலம் நாந்தாண்டா
அன்னை தமிழ்நாட்டுல நான் அனைவருக்கும் சொந்தண்டா
அதாண்டா இதாண்டா அருணாசலம் நாந்தாண்டா
அன்னை தமிழ்நாட்டுல நான் அனைவருக்கும் சொந்தண்டா
ஆண்டவன் நடத்திடுவாண்டா
ஆண் குழு:
ஹோய் ஹோய் ஹோய்
ஆண்டவன் நடத்திடுவாண்டா
ஆண் குழு:
ஹோய் ஹோய் ஹோய்
அருணாசலம் நடந்திடுவாண்டா
ஆண் குழு:
ஹோய் ஹோய் ஹோய்
நான் உப்பு போட்ட ஆள மறப்பதில்லடா
ஆனா தப்பு செஞ்ச ஆள விடுவதில்லடா ஆஹ
அதாண்டா இதாண்டா அருணாசலம் நாந்தாண்டா
அன்னை தமிழ்நாட்டுல நான் அனைவருக்கும் சொந்தண்டா
இசை சரணம் - 1
ஆண் குழு:
ஹோய் ஹோய் ஹோய்
ஹோய் ஹோய் ஹோய் (இசை)
என் கண்ணிரண்டையும் காப்பாத்தும் கண்ணிமையும் நீதான்
என் தோள்களிலே முழுப்பலமாய் உள்ளவனும் நீதான்
என் நெஞ்சில் வாழ்ந்து வரும் தைரியமும் நீதான்
என் சொல்லில் குடியிருக்கும் சத்தியமும் நீதான்
ஆண் குழு:
ஹோய் ஹோய் ஹோய்
ஹோய் ஹோய் ஹோய்
ஆஹா.இன்னுயிராய் வந்தவனே என் உயிரும் நீதான்
என் இருதயத்தில் துடிதுடிப்பாய் இருப்பவனும் நீதான்
எண்ணம்போல் வெற்றி பெற உழைப்பவனும் நீதான்
என் இறுதிவரை கூட வரும் கூட்டணியும் நீதான்
ஓம் அருணாச்சலேஸ்வராய நமஹா
ஓம் அருணாச்சலேஸ்வராய நமஹா
இளமையில் உழைப்பவன் முதுமையில் சிரிக்கிறான்
இளமையில் படுத்தவன் முதுமையில் தவிக்கிறான்
உனது ரத்தமும் எனது ரத்தமும் உறவு ரத்தமடா
நீயும் நானும் நானும் நீயும்
நிறத்தால் குணத்தால் ஒண்ணுடா ஆஹா
அதாண்டா இதாண்டா அருணாசலம் நாந்தாண்டா
அன்னை தமிழ்நாட்டுல நான் அனைவருக்கும் சொந்தண்டா
ஆண் குழு:
ஹாஹாஹாய் ஹய் ஹய் ஹய் ஹய்
ஹாஹாஹாய் ஹய் ஹய் ஹய் ஹய்
இசை சரணம் - 2
ஆண் குழு:
ஹோய் ஹோய் ஹோய்
ஹோய் ஹோய் ஹோய் (இசை)
தாய் என்ற ஒரு தெய்வம் வீட்டோட இருக்கு
நீ தனி தனியா கோயில் குளம் அலைவதும் எதுக்கு
அம்மாவின் பாதத்தில் கற்பூரம் கொளுத்து
ஆனந்தக் கண்ணீரில் அபிஷேகம் நடத்து
ஆண் குழு:
ஹோய் ஹோய் ஹோய்
ஹோய் ஹோய் ஹோய் (இசை)
காட்டு விலங்கெல்லாம் கொழுத்தாத்தான் மதிப்பு - அட
காவித் துறவியெல்லாம் மெலிஞ்சாத்தான் மதிப்பு
பணம் கொஞ்சம் இருந்தாலும் கொடுத்தாத்தான் மதிப்பு
நீ மகனென்றால் உன் தாயை மதிச்சாத்தான் மதிப்பு
ஓம் அருணாச்சலேஸ்வராய நமஹா
ஓம் அருணாச்சலேஸ்வராய நமஹா
தனக்கென வாழ்பவன் இருக்கையில் இறக்கிறான்
பிறர்க்கென வாழ்ந்தவன் இறந்துமே இருக்கிறான்
உன்னை விடவும் எனக்கு வேறு உறவு இல்லையடா என்னை
என்றும் வாழ வைக்கும் தெய்வம் தெய்வம் நீயடா
ஹா- அதாண்டா இதாண்டா அருணாசலம் நாந்தாண்டா
அன்னை தமிழ்நாட்டுல நான் அனைவருக்கும் சொந்தண்டா
அதாண்டா இதாண்டா அருணாசலம் நாந்தாண்டா
அன்னை தமிழ்நாட்டுல நான் அனைவருக்கும் சொந்தண்டா
ஆண்டவன் நடத்திடுவாண்டா
ஆண் குழு:
ஹோய் ஹோய் ஹோய்
அருணாசலம் நடந்திடுவாண்டா
ஆண் குழு:
ஹோய் ஹோய் ஹோய்
நான் உப்பு போட்ட ஆள மறப்பதில்லடா
ஆனா தப்பு செஞ்ச ஆள விடுவதில்லடா ஆஹா
அதாண்டா இதாண்டா அருணாசலம் நாந்தாண்டா ஆஹ
அன்னை தமிழ்நாட்டுல நான் அனைவருக்கும் சொந்தண்டா
அதாண்டா இதாண்டா அருணாசலம் நாந்தாண்டா
அன்னை தமிழ்நாட்டுல நான் அனைவருக்கும் சொந்தண்டா